search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜனாதிபதியை பிரமுகர்கள் சந்தித்ததில் குளறுபடி
    X

    கோப்பு படம்.

    ஜனாதிபதியை பிரமுகர்கள் சந்தித்ததில் குளறுபடி

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.
    • ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார். அவரை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என முக்கிய பிரமுகர்கள் முறைப்படி அனுமதி கோரி இருந்தனர். ஆனால், பலருக்குச் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பொதுநல அமைப்பினருடன் சந்திக்க அனுமதி கோரினார்.

    அவருக்கு மட்டும் அனுமதியளித்து, மற்றவர்களை அனுமதிக்க வில்லை. இதனால் ஜனாதிபதியை சந்திக்காமல் அவர் திரும்பினார். துணை சபாநாயகர் ராஜவேலு, அவரது துணைவியார் மாலதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அவர்களுக்கு சரியான தகவலும் அளிக்கவில்லை.

    புதுவையை சேர்ந்த வர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுமதி அளித்துள்ளனர். இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் நடக்க மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததே காரணம். இதனால் ஜனாதிபதிக்கு மிகப் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

    எனவே, நிர்வாகக் குளறுபடிகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்குக் ஜனாதிபதி செயலகம், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலருக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×