search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்
    X

    புதுவை பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

    பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்

    • புதுவையில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறையில் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
    • பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறையில் ஏராளமானோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    3 மாதம் பணி செய்த அவர்களை தேர்தல் துறை பணியிலிருந்து நீக்கியது. முதல் கடந்த 7 வருடங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி உண்ணாவிரதம், கடலில் இறங்கி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தினுள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த அதிகாரிகள் ஊழியர்களிடம் கலைந்து போக கூறினார்.

    அப்போது ஊழியர்கள் முதல்-அமைச்சர் வந்து பேச வேண்டும், நீங்கள் பேச கூடாது அவர் உடனடியாக எங்களுக்கு பணி வழங்க வேண்டும், தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு வந்த கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதிசிங் தலைமையிலான் போலீசார் போராட்டத்ததை கைவிட கோரி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால், ஊழியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    Next Story
    ×