search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிகளின் உரிமையை பறிக்கும்-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கண்டனம்
    X

    கோப்பு படம்.

    விவசாயிகளின் உரிமையை பறிக்கும்-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கண்டனம்

    • ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மின்துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்க, அதை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து மத்திய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாய பம்ப் செட்டுக்கு மின் மீட்டர் பொருத்தும் பணியை அரசு செய்து வருகிறது. புதுவை அரசும், மத்திய பா.ஜனதா அரசும் விவசாயிகளின் மின்சார உரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    விவசாயிகளுக்கு தனி மின்தடம் என்பதும் அவர்களை கடுமையாக பாதிக்கும். பலமுறை பொய்யான வாக்குறுதிகளை அளித்த அமைச்சரின் தற்போதைய வாக்குறுதியையும் விவசாயி கள் நம்பப்போவதில்லை.

    எனவே முதல்-அமைச்சர் மவுனம் கலைந்து பம்பு செட்களுக்கு மின்மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும். மின்துறை தனியார்மய நடவடிக்கை அனைத்தையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி, தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×