search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
    X

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்ற காட்சி.

    திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ந் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகாசூர வதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதில் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதனையொட்டி திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா, வான வேடிக்கை யுடன் நடைபெற்றது.

    Next Story
    ×