search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    டெங்கு விழிப்புணர்வு பேரணி
    X

    மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

    டெங்கு விழிப்புணர்வு பேரணி

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர், சுகுமாரன், செயலாளர். டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜரா ஜன், கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகி யோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமின் இறுதி நாளில் டெங்கு காய்ச்சல் விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவ அதிகாரி முகந்தி, நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பேரணி கரிய மாணிக்கம் உழவர் உதவி யகத்தில் தொடங்கி, நெட்டப்பாக்கம் சிவன் கோவில் திடலில் முடிவ டைந்தது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிறை வாக பண்ட சோழநல்லூர் கிராமத்தி லுள்ள அரசு நடு நிலை பள்ளி வளாகத்தில் பூந்தோட்டம் அமைத்துத்த ரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×