search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.காங்-பா.ஜனதா அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த காட்சி. 

    என்.ஆர்.காங்-பா.ஜனதா அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
    • பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி (கிழக்கு) புதிதாக வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. நிர்வாகியின் அறிமுக கூட்டம் வட்டார காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தியாகராஜன் பி.சி.சி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது.

    புதுவை மாநிலத்தில் நடைபெற்று வரும் என்.ஆர். காங். மற்றும் பா.ஜனதா அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து உடனுக்குடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதென முடிவு செய்யப்பட்டது. முத்தியால்பேட்டையில் உள்ள மக்களின் குறைகளை முன்னெடுத்து போராட்டங்கள் நடத்துவது. முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து காங்கிரஸ் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் சுரேஷ், சதீஷ் குமரன் மணவாளன்,பொருளாளர் சண்முகம்,பொதுச் செயலாளர்கள் குணசேகரன், நாகராஜ் பாண்டியன், முகுந்தன் குமார், செயலாளர்கள் கோவிந்தன், விஜயகுமார், கருணா மூர்த்தி, சக்தி, பாலசுந்தரம், மேரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×