என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மாணவர்களுக்கு சுவையான உணவு
- அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
- தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒரு அரசு பள்ளி மாணவர் வந்து பேசினார். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கலவை சாதம் நன்றாக உள்ளது. ஆனால் சாம்பார் சாதம் நன்றாக இல்லை. சாம்பார் சாதம் வழங்கும் நாளில் சரியாக அரிசி வேகவில்லை, சுவையும் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்தார்.
ஏற்கனவே அக்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும்.
இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் பகுதிநேர ஊழியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியினரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதம் சுவையாக இல்லை என சட்டசபையில் புகார் கூறியிருந்தனர். தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் அக்சய பாத்திரம் நிறுவனத்தினரை அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வழங்க முடியுமா? என அமைச்சர் ஆலோசித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்