என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
குளத்தை தூர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
- பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.
- குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது.
புதுச்சேரி:
பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.
இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் இந்த குளத்தில் கலந்து கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.
மேலும், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்ததால் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு கவர்னராக இருந்த கிரண்பேடி நேரடியாக குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை தூர்வாரி பராமரிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆனால் அவரது உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.தற்போது இந்த குளம் புதர் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது. பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது.
எனவே இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவுபடி நீர் நிலையில் வசிக்கும் மக்களை வீடற்ற மக்களுக்கு மாற்று இடத்தில் மனைபட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்