என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி 232 பேருக்கு கொரோனா
    X

    கோப்பு படம்

    புதுச்சேரி 232 பேருக்கு கொரோனா

    • புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 180, காரைக்காலில் 38, ஏனாமில் 13, மாகியில் ஒருவர் என புதிதாக 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 25, காரைக்காலில் 3, ஏனாமில் 2 பேர் என 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 34, காரைக்காலில் 171, ஏனாமில் 25, மாகியில் 2 பேர் என ஆயிரத்து 232 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 207, காரைக்காலில் 89, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 248 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநிலத்தில் கொரோனா வுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×