என் மலர்
புதுச்சேரி

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
- புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வர் ரவிச்சந்திரன், அன்னை சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லுாரியின் புல முதல்வர் ஜெயசீலன் தேவதாசன் தலைமை தாங்கினர்.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்த மிழ்செல்வி வரவேற்றார். பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஸ்ரீதேவி அறிமுக உரையாற்றினர்.
விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில், பொருளாளர் ராஜ ராஜன், இயக்குனர் ராஜ கோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத் துவ கல்லுாரி டீன் கார்த் திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆராய்ச்சி டீன் கலைச்செல்வன், கல்லூரி முதல்வர் முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளங்கலை பட்டப்பி ரிவில் புதுச்சேரி பல்கலை அளவில் (2016-2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற அபிநயாவிற்கும், முதுகலை பட்டப்பிரிவில் (2018 -2020)ம் ஆண்டு பயின்று முதல் மதிப்பெண் பெற்ற கிரிஸ்டி ரெபேகாவிற்கும் சிறப்பு சான்றிதழ் வழங் கப்பட்டது.
இணை பேராசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.






