என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வியாபார போட்டியில் மோதல்
    X

    கோப்பு படம்.

    வியாபார போட்டியில் மோதல்

    • கடற்கரை சாலையில் வியாபார போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • புதுவை கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடற்கரை சாலையில் வியாபார போட்டியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

    புதுவை கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ரேகா. நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த இவர் தனது மகள்கள் ஜோதிகா, தீபிகா, சுஜி ஆகியோருடன் புதுவை கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் மணி மற்றும் தர்மா ஆகியோரும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரேகாவுக்கும், தர்மா மற்றும் மணி ஆகியோருக்கிடையே வியாபார போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்மா மற்றும் மணி ஆகியோரின் குழந்தைகள் ரேகாவின் மகள்கள் மீது கல் வீசி எறிந்ததாக தெரிகிறது. இதுபற்றி தர்மா மற்றும் மணியிடம் ரேகா முறையிட்ட போது அவர்கள் ரேகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சமூகத்தை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும் ரேகாவையும், அவரது மகள்களையும் மணி, தர்மா, மணியின் மனைவி சந்தியா, தர்மாவின் மனைவி செல்வி மற்றும் மணியின் மாமியார் வேளாங்கன்னி ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேகா தனது மகள்களுடன் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×