என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
- இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மூர்த்தி நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் தருண் (வயது22). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று திரும்புவது வழக்கம். அதுபோல் தருண் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார்.
ஆரியப்பாளையம் மேம்பாலத்தை கடந்து மங்கலம் ரோடு சந்திப்பில் சென்ற போது தருண் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வில்லியனூரை சேர்ந்த குலசேகரன் (60) என்பவர் மீது மோதி விட்டு பின்னர் அதன் பின்னால் மனைவி-மகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் ராம ரெட்டிக்குளம் விமல்(32) என்பவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட தருண் தலை, முகத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மற்ற 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த குலசேகரன், விமல் மற்றும் அவரது மகள் கவிதா(13) ஆகியோர் படுகாயமடைந்தனர். விமலின் மனைவிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்த 3 பேரும்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்