search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைய  தொழிலாளர்களே காரணம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி
    X

    புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியம் சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே கைவினைப் பொருள் கண்காட்சியினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து காசோலை வழங்கிய காட்சி.

    கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைய தொழிலாளர்களே காரணம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி

    • புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
    • ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவையில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக இயங்கியது. தனியார் அதிக லாபம் ஈட்டக்கூடிய பெட்ரோல் பங்க், மதுபான கடைகள் ஆரம்பிக்க பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    தனியார் மதுபான கடைகள் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் அருகில் உள்ள அரசு மதுபான கடைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது. இதனால்தான் மதுபான கடைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் மில் சிறப்பாக இயங்கி வந்தது.

    ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது. ஆனால் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு சென்றுள்ளன. இதற்கு ஊழியர்கள் தங்கள் பணியினை சரிவர செய்யாததுதான் காரணம்.

    அரசு ஊழியர் என நாம் நினைக்கக்கூடாது. நாம் வேலைபார்த்தால்தான் நிறுவனம் சரியாக செயல்படும் என கருத வேண்டும். பல நிறுவன ஊழியர்கள் இப்போது ஏதாவது சம்பளம் கொடுங்கள் என கேட்கின்ற னர். வயிறு காய்ந்தவுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

    அரசு நிதி ஒதுக்கி, லாபத்தில் இயங்கியபோதே நன்றாக வேலை செய்திரு ந்தால் கூட்டுறவு நிறுவ னங்களுக்கு இந்தநிலை ஏற்பட்டி ருக்காது. கூட்டுறவு நிறுவனம், சங்கங்களை சேர்ந்தவர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் நிறுவனத்தை நன்றாக செயல்படுத்த முடியாது.

    நிறுவனம் நன்றாக செயல்படா விட்டால் 30 மாதம், 40 மாதம் சம்பள பாக்கி ஏற்படத்தான் செய்யும். நிறுவனங்களின் இந்த செயல்பாடால் கூட்டுறவு வங்கிகளும் நலிவடைந்துள்ளன. ஊழியர்களும், நிர்வாக த்திற்கு வருபவர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால்தான் கூட்டுறவு நிறுவனங்களை செயல்படுத்த முடியும்.

    சிறப்பாக செயல்பட்ட பாண்லே நிர்வாகத்திலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை சிறப்பாக கொண்டுவர முடியும். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற வேண்டும். நான் சொல்வது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.

    ஆனால் உண்மை நிலையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை உழைப்பால் உயர்த்தி க்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×