என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு சான்றிதழ்
    X

    மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு முருகையன் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

    மாணவர்களுக்கு சான்றிதழ்

    • தட்டச்சுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்த்தி வழியனுப்பு விழா நடைபெற்றது.
    • ஜீவானந்தபுரம் கிராமக் குழு பொறுப்பாளர் சபாநாயகம், செண்பகா கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யா மாரியப்பனர்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவனாந்தபுரம், நாடார் உறவின் முறைச் சங்கத்தில் தட்டச்சுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்த்தி வழியனுப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு அறக் கட்டளை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை யாற்றினார்.

    நிகழ்ச்சியில் நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு நோக்க வுரையாற்றினார்.

    ஜீவானந்தபுரம் கிராமக் குழு பொறுப்பாளர் சபாநாயகம், செண்பகா கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முருகையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினர்.

    பேராசிரியர் இளங்கோ, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்படக் குழுவினர் சுகுமார், ஜெயகுமார், சஞ்சய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் இருளா யம்மாள், ஜீவானந்தம், கோபாலன், காசிராஜன், சொக்கமுத்து அய்யனார், ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் தேன்மொழி நன்றி கூறினார்.

    Next Story
    ×