search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல்
    • 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பல்வேறு கோவில்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து பத்திரங்களை, பல கோடி ரூபாய் நகைகளை இந்து சமய நிறுவனத்தில் 1971-ம் ஆண்டு சேர்க்கும் போது இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் துணையுடன் திருடியும், பொய்கண்க்குகள் எழுதியும் கோவில் சொத்துக்களை கோவில் நிர்வாகிகள் திருடி உள்ளனர்.

    அனைத்து கோவில் சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு மீண்டும் வழங்க மாநில அரசு, புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சி.பி.ஐ. அமலாக்கத்துறை மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களை 1950-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சோதனை செய்து பல ஆயிரம் கோடி சொத்துக்களை மீட்டு கோவில்களுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×