என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிமெண்ட் சாலை அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    சிமெண்ட் சாலை அமைக்கும் பணி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு கிராமம் புது நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
    • புதுவை அரசு ஆதிதிராவிடர் வரை நிலை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முரளி, மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு கிராமம் புது நகர் பகுதியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

    மேலும் வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது இது குறித்த பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. அங்காளனிடம் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து புதுவை அரசு ஆதி திராவிடர் வரைநிலை மேம்பாட்டு கழகத்தின் மூலமாக ரூ. 24 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை ஏற்பாடுகள் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் கலந்துகொண்டு பூமி பூஜை நிகழ்ச்சி ெதாடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் பொழுது புதுவை அரசு ஆதிதிராவிடர் வரை நிலை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முரளி, மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×