search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கால்நடைகளுக்கான கண்காட்சி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு அங்காளன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய காட்சி.

    கால்நடைகளுக்கான கண்காட்சி-அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடைகோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகின்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் திருபுவனை தொகுதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதியில் உள்ள கால்நடை- கோழிகளுக்கு எழில் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அங்காளன் எம்.எல்.ஏ. பங்கேற்று சுமார் 189 - கால்நடைகளான மாடுகள் ,கோழிகள், ஆடுகள், கன்றுகள் , வான்கோழி ஆகிய கால்நடைகளுக்கு முதல் 3 பரிசுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    புதுவை அரசானது விவசாயிகளின் வாழ்வா தாரமாக விளங்குகின்றது. குறிப்பாக கால்நடைகளை வளர்க்கின்ற விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் துறையின் இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் குமரன், மதகடிப்பட்டு கால்நடை மருத்துவர் செங்கேணி மற்றும் கால்நடை பரிசளிப்பு விழாவின் நடுவர்களாக டாக்டர் பிரீத்தா, டாக்டர் ராஜா மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    Next Story
    ×