search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நடு ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து
    X

    கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி

    நடு ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து

    • புதுவை அருகே நடு ரோட்டில் கார் கவிழ்ந்தது பெண் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்
    • புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மனைவி நளினி உள்ளிட்ட 4 பேர் இன்று சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

    திண்டிவனம்-புதுவை பைபாஸ் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது காருக்குப் பின்னால் வந்த டிப்பர் லாரி உரசுவது போல் வந்தது. காரை ஓட்டிய நளினி பயந்து சாலை நடுவே இருந்த கட்டையில் மோதினார்.

    அப்பொழுது கார் பல்டி அடித்து தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது.

    இதில் லேசான காயத்துடன் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×