என் மலர்
புதுச்சேரி

கால்வாய் தூர்வாரும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.
கால்வாய் தூர்வாரும் பணி -கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலை சின்ன மணி கூண்டு அருகில் ப-வடிவ வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அப்பகுதியை சார்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
- எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் வாய்க்கா ல்கள் தூர்வாரப்பட்டது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலை சின்ன மணி கூண்டு அருகில் ப-வடிவ வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அப்பகுதியை சார்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறி யாளர்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், பன்னீர் மற்றும் இளநிலை பொறியாளர் வேல்முருகன் ஆகியோரை அணுகி வர இருக்கும் கன மழைக்குள் ப-வடிவ வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.
எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் வாய்க்கா ல்கள் தூர்வாரப்பட்டது. அதனை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
இதில் அப்பகுதி வியாபாரிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகர் நோயல், மாநில இளைஞ ரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளை செயலாள ர்கள் காந்தி,செல்வம், காலப்பன், மணிகண்டன், அசோக் மற்றும் ராகேஷ் கவுதமன், தேசீர், பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், ரகுமான், மோரிஸ்,சிரஞ்சீவி, மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.






