search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட்-பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பாராட்டு
    X

    கோப்பு படம்.

    ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பட்ஜெட்-பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் பாராட்டு

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
    • ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏழைகளின் வளர்ச்சிக்காக வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏழை மக்களுக்கு மிகவும் பயன ளிக்கக்கூடிய வகையிலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய முறையில் பட்ஜெட் தயாரித்து வழங்கி உள்ளார்.

    கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு துறையை தனியாக பிரித்து, தனி துறை உருவாக்கப்படும். தீயணைப்பு துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    புதுவையில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனவும், கடற்கரையில் மிதக்கும் படகுத்துறை அமைக்கப்படும் என்பது உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

    50 புதிய பஸ்கள் வாங்க ரூ.25 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்களுக்கான சிறப்பான பட்ஜெட்டை வழங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பா.ஜனதா நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×