என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தனியார் நிறுவன ஊழியரை தடியால் அடித்த அண்ணன், தம்பி கைது
- கணபதியின் மாமனார் கண்ணதாசன் ஆகியோர் ரவியை தடியால் அடித்ததில் அவருக்கு உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
- தேவா கொடுத்த புகாரின் பேரில் புகாரின் பேரில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்கிற தேவா (வயது40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சொந்த இடத்தில் வீடு கட்டி வரும் நிலையில், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் மகன்களான கணபதி மற்றும் கார்த்தி என்கிற தளபதி ஆகியோர் தேவாவிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கணபதி அவரது சகோதரர் கார்த்தி என்கிற தளபதி மற்றும் கணபதியின் மாமனார் கண்ணதாசன் ஆகியோர் ரவியை தடியால் அடித்ததில் அவருக்கு உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தேவா கொடுத்த புகாரின் பேரில் புகாரின் பேரில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கணபதி மற்றும் கார்த்திக் என்கிற தளபதியை கைது செய்தனர். தலைமறைவான கண்ணதாசனை தேடி வருகின்றனர்.
Next Story






