search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திறந்த வெளி கழிவுநீர் வாய்க்காலால் கொசுக்கள் உற்பத்தி - பொதுமக்கள் அவதி
    X

    மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பு அருகில் திறந்தவெளியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்.

    திறந்த வெளி கழிவுநீர் வாய்க்காலால் கொசுக்கள் உற்பத்தி - பொதுமக்கள் அவதி

    • பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.
    • சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு4 முனை சந்திப்பு அருகே மேம்பாலம் வழியாக திருக்கனூர் செல்லும் சாலை பகுதியில் திறந்த வெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறி திருபுவனை ஏரியில் சென்று சேரும் வகையில் இந்த கால்வாய் உள்ளது.

    தற்போது அங்குள்ள ஓட்டல்கள், கடைகள், காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றது.

    இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் இடமாக மாறி உள்ளது.

    மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கால்வா யினை பார்வையிட்டு தூர்வாரி தேங்கி நிற்கும் சாக்கடை நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் வாய்க்கால் மேல் சிலாப்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×