என் மலர்
புதுச்சேரி

பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
பா.ஜனதா செயற்குழு கூட்டம்
- நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் சவுரி படையாட்சி அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தலைவர் உமாபதி தலைமை வகித்தார்.
- தொகுதி பொறுப்பாளர் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மூத்த தலைவர் இளங்கோ, நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் சவுரி படையாட்சி அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
தொகுதி தலைவர் உமாபதி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., மூத்த தலைவர் இளங்கோ, நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொகுதியில் நடந்த பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி வழங்க அசோக்பாபு எஎம்.எல்.ஏ., உறுதியளித்தார். செயற்குழு உறுப்பின மாமதி ராஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார்.
இளங்கோவன் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாடு, மக்கள் பணிகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில், தொகுதி நிர்வாகிகள் சண்முகம், ரேணுகாதேவி, முருகன், ஜெயந்தி, செந்தில், கண்ணதாசன், வெங்கடேசன், முருகேசன், ஜான் பீட்டர், ரவி, திலகவதி, மனோகர், மாநில நிர்வாகிகள் லெனின், விஜயலட்சுமி, விஜய ராஜேஷ், சுந்தரமூர்த்தி, மாதவி, மகேந்திரன், வைத்தியநாதன், ஜூன் கேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






