என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இரு தரப்பினர் மோதல்; 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    இரு தரப்பினர் மோதல்; 4 பேர் கைது

    • உருளையன்பேட்டை பெரியார்நகரில் நடுரோட்டில் சண்டை போட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை பெரியார்நகரில் நடுரோட்டில் சண்டை போட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உருளையன்பேட்டை பெரியார் நகரில் பொது இடத்தில் நின்றுக்கொண்டு 2 பிரிவினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது25),அமுது(24) மற்றும் சோமு(46), ராஜா(19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×