என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
    X

    வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

    வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

    • மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. வில்லியனூர் அருகே மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் புகழேந்தி (வயது22).
    • அதனை தொடர்ந்து பருதி அவருடைய நண்பர் ராம் என்பவரையும் அழைத்து வந்தார். பின்னர் 4 பேரும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    வில்லியனூர் அருகே மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் புகழேந்தி (வயது22). இவர் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜய் என்பவர் புகழேந்தியை வெளியே அழைத்து சென்றார்.

    பின்னர் இருவரும் அங்குள்ள வயலில் அமர்ந்து மது குடித்து கொண்டி ருந்தனர். அப்போது விஜய் அவருடைய நண்பரான பருதியை செல்போனில் பேசி மது அருந்த அழைத்தார். அதனை தொடர்ந்து பருதி அவருடைய நண்பர் ராம் என்பவரையும் அழைத்து வந்தார். பின்னர் 4 பேரும் ஒன்றாக மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென புகழேந்திக்கும், பருதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பருதி பீர் பாட்டிலால் புகழேந்தியின் தலையில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த புகழேந்தியை விஜய் மற்றும் ராம் ஆகிய இருவரும் மீட்டு அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் இதுகுறித்து புகழேந்தி மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×