என் மலர்

    புதுச்சேரி

    காரைக்கால் அருகே லாரியை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள்:லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    காரைக்கால் அருகே லாரியை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள்:லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடைக்கலசாமி காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
    • இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த நெடுங்காடு காமராஜர் சாலை, அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி (வயது42) லாரி ஓட்டுநர். இவரது மனைவி அனிதாமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அனிதாமேரி, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அடைக்க லசாமி காரைக்காலில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கினார். கடனை சரிவர செலுத்தாததால், வங்கி நிர்வாகத்தினர், அடைக்கலசாமி லாரியை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த அடைக்கலசாமி, மது குடிக்க ஆரம்பித்தார். சம்பவத்தன்று வழக்கம் போல், அடைக்கலசாமி அதிகமாக மது குடித்து வீட்டில் சண்டை போட்டு ள்ளார். இதனையடுத்து அடைக்கலசாமி தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, அடைக்கலசாமி தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி அனிதாமேரி கொடுத்த புகாரின் பேரில், காரை க்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×