search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நகர பகுதியில் 15 நாட்கள் போக்குவரத்துக்கு தடை
    X

    கோப்பு படம்.

    நகர பகுதியில் 15 நாட்கள் போக்குவரத்துக்கு தடை

    • வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பொதுப்பணித்துறை பிரிவால் கழிவுநீர் வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நகர பகுதியில் நடக்கிறது.

    இந்த நாட்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. சுப்பையா சாலை, லால்பகதூர் சாஸ்திரி சாலை இடையே வரும் 30-ந் தேதி வரையிலும், லால் பகதூர் சாஸ்திரி சாலை, ஐ.ஜி அலுவலகம் இடையே மே 1 முதல் 15-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இதேபோல பிராங்கோயில் மார்ட்டின் தெரு சந்திப்பில் லொரிஸ்டோன் தெருவுக்கும், எஸ்.வி. படேல் சாலைக்கும் இடையே மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    கொம்பங்கி தெரவில் ஐ.ஜி அலுவலகம் முதல் தலைமை செயலகம் வரை மே 16 முதல் 31-ந் தேதி வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த தகவலை புதுவை போக்குவரத்து எஸ்.பி மாறன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×