என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழிப்புணர்வு பேரணி
    X

    அரியூர் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    விழிப்புணர்வு பேரணி

    • அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் 61-வது தின வார விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் சவுந்தரராஜன், பார்மசி கல்லூரி டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியின் சார்பில் உலக மருந்தாளுனர்கள் 61-வது தின வார விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் விழாவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மேலாண் இயக்குனர் ராஜுவ் கிருஷ்ணா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் சவுந்தரராஜன், பார்மசி கல்லூரி டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக புதுவை பார்மசி கவுன்சிலின் தலைவர் ஜெகநாதன், துணைத் தலைவர் வினோத்குமார், பதிவாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

    வில்லியனூர் சிவன்கோவில் கோபுர வாசலில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு கோபுர தெருக்களின் வழியாக சென்று வில்லியனூர் புறவழிச்சாலையில் முடிவடைந்துஇந்த நிகழ்ச்சியில் வில்லியனூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கொண்டல பாலாஜிராவ், பார்மசி கல்லூரி மருத்துவ துணை பேராசிரியர்கள் ஜனார்த்தனன், நிர்மலா, ரகுராமன், ஞானஅனிதா, ஜீவிதா, சென்னியப்பன், காயத்ரி, கஸ்தூரி மற்றும் துறை பேராசிரியர்கள் மருந்தாளுனர்கள், மாணவர்கள் ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மருத்துவ முகாம் விளையாட்டுப் போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன.

    Next Story
    ×