search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழிப்புணர்வு கலை படைப்பு
    X

    மாணவர்கள் வடிவமைத்த கலை படைப்புகள்.

    விழிப்புணர்வு கலை படைப்பு

    • அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது.
    • கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சேலியமேடு கிராமத்தில் இயங்கி வரும் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது.

    கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய வீணாகும் சுரக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் உலர்ந்த இலை, பூ, மட்டைகளை கொண்டு கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர். அழிவின் உயிர்ப்பு என்ற பெயரில் பள்ளியில் இயங்கும் கலைக்கூடம் அசத்தும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது.

    இந்தக் கலை முயற்சிக்குப் பின்னணியில் உந்து சக்தியாக இருப்பவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி. அவரது பயிற்சியில் அடுத்து ஒரு படைப்பை மாணவர்கள் சந்தோஷ்,நவநீதன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

    இந்த கலைப் பொருள் மற்ற மாணவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×