என் மலர்
புதுச்சேரி

ஒய்வு பெற்ற சிறைத்துறை சூப்பிரண்டுக்கு விருது வழங்கிய காட்சி.
ஒய்வு பெற்ற சிறைத்துறை சூப்பிரண்டுக்கு விருது
- புதுவை தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- பாவலர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாருக்கு இந்த புவி சொந்தம் என்ற தலைப்பில் தமிழ் ஒளி குறித்து சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அடுத்து கவிஞர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தமிழ் ஒளியின் பன்முகப் பாங்கு என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் அருள்ராஜ், விஜயலட்சுமி ,முனைவர் பிரபா, டேவிட் பிரபாகர், மற்றும் மணிமொழி ஆகியோர் கவிதை வாசித்தனர்.
பாவலர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாருக்கு இந்த புவி சொந்தம் என்ற தலைப்பில் தமிழ் ஒளி குறித்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற சிறைத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளர் துரை. செல்வம், பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏகாம்பரம், தன்னம்பிக்கை கலை குழு தலைவர் எலிசபெத் ராணி ஆகியோருக்கு தமிழ் சங்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முடிவில் சிவேந்திரன் நன்றி கூறினார். விழாவில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






