என் மலர்
புதுச்சேரி

ஊழியர்களுக்கு விருது வழங்கிய காட்சி.
சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது
- புதுவை ஜிப்மர் பாரதிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பாரதிய மஸ்தூர் சங்க தின விழா மற்றும் கொரோனாவின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் பாரதிய ஊழியர்கள் சங்கம் சார்பில் பாரதிய மஸ்தூர் சங்க தின விழா மற்றும் கொரோனாவின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாய்.ஜெ.சவரணன்குமார், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
பி.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், பொதுச்செயலாளர் விமேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் சிதம்பர சாமி ஆகியோர் கலந்துகொண்டு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். தலைவர் செல்வம், செயலாளர் உதயனன், பொருளாளர் சர்குணன், சண்முகம், முகமது அலி, ஞானசீலன், சிவகாமணி, ஜெயராமு, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






