என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு பரிசு வழங்கு காட்சி.
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
- வீராம்பட்டினம் கிராமத்தில் தடகள விளையாட்டு மைதானத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் கிராமத்தில் தடகள விளையாட்டு மைதானத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜெ.பி.பொது அறக்கட்டளை தலைவர் பிரேம்நாதன், அவரது மகன் டேனியல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆடிட்டர் தீனா, கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பொதுத்தேர்வில் அதிக மதிபெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கபரிசு வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை லிங்கேஸ்வரன், சத்தியசீலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரி யர் கோபு நன்றி கூறினார்.
Next Story






