search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் வியாபாரியை தாக்கி கொலைமிரட்டல்
    X

    கோப்பு படம்.

    பெண் வியாபாரியை தாக்கி கொலைமிரட்டல்

    • கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த கோட்டைமேடு சிவகாமி நகர், சேரன் வீதியை சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி பரிதா (39). இவர் சுய உதவி குழுக்கள் மூலம் தனியார் வங்கியில் இருந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி சங்கரி (38) என்பவருக்கு தனிநபர் கடனாக ரூ. 1.50 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

    அதில் ரூ.75 ஆயிரம் அவரிடம் கடனாக பெற்று அதற்கான வங்கியில் செலுத்து வதற்கு அவ்வப்போது பணம் சங்கரிடம் கொடுத்து வந்துள்ளார்.

    ஆனால் செலுத்திய பணத்தை சங்கரி முறையாக செலுத்தாமல் விட்டுவிட்டார். இதனால் வங்கி ஊழியர்கள் கடன் பெற்றுத் தந்த பரிதாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இது சம்பந்தமாக இருதரப்பிடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

    புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் பெண்களிடம் சமாதானம் செய்து வைத்து சங்கரியை பணம் செலுத்த கூறினர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் சாலை யோர கடை வைத்து வியாபாரம் செய்து வந்த பரிதாபை அங்கு வந்த சங்கரி அசிங்கமாக திட்டி மானப ங்கம் படுத்தி இரும்பு கரண்டியால் தாக்கி தங்கள் வீட்டு ஆட்களை கொண்டு தீர்த்து விடுவதாக கொலை மிரட்டல் விட்டு சென்று விட்டார்.

    இது சம்பந்தமாக புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×