என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
காவலாளியை தாக்கி கொலை மிரட்டல்
- வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
வானூர் அருகே தாண்டவ மூர்த்திக்குப்பம் ரெயில்வே தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது67). இவர் வில்லியனூர்-கூடப்பாக்கம் ரோட்டில் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள ஜல்லி விற்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அதே கம்பெனியில் முருகையன் என்பவரும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் ஜல்லி கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த முருகையன் தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் அடிக்கடி இங்கு வந்து தொல்லை கொடுக்கிறாய்? என கூறி கருங்கல்லால் சுப்பிரமணியை தாக்கினார்.
மேலும் இங்கேயே உன்னை அடித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். அதோடு அங்கிருந்த முருகையனின் உறவினர் சுகன்யா மற்றும் கடை உரிமையாளர் கோகுல்ராஜ் ஆகியோரும் இனிமேல் இங்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியனை அங்கிருந்தவர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியன் அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது மருமகள் விமலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்