என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
- தவளக்குப்பம் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கெங்கையம்மாள்(வயது50).
இவர் தனது வீட்டின் எதிரே கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த நித்தீஷ்(25) என்பவர் கெங்கையம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்கிறாய்? என கேட்டு தகராறு செய்தார்.
இதனை கெங்கையம்மாள் தட்டி கேட்ட போது அவரை கையில் வைத்திருந்த சவுக்கு தடியால் தலையில் தாக்கினார். மேலும் நித்தீசின் மனைவி கோமதி மற்றும் நித்தீசின் அண்ணன் மகன் தமிழ்வாணன் ஆகியோரும் கெங்கையம்மாளை கிழே தள்ளி வயிற்றிலும், முகத்திலும் எட்டி உதைத்தனர்.
அதோடு 3 பேரும் சேர்ந்து இனிமேல் எங்கள் குடும்பத்தாரிடம் பிரச்சினை செய்தால் உங்கள் குடும்பத்தையே எரித்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த கெங்கையம்மாள் தனது உறவினர் மூலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லவாடு பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி வித்யா (38). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வேலுமணி மது குடித்து விட்டு வித்யாவை கையாலும், மரக்கட்டையாலும் தாக்கினார்.
மேலும் நீ உயிரோடு இருந்தால் எனக்கு தொல்லையாக இருக்கும். எனவே கொலை செய்து விடுகிறேன் பார் என்று கூறி மீண்டும் வித்யாவை தலையில் தாக்கினார்.
இதுகுறித்து வித்யா தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.






