என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அருந்ததியருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு-அ.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    புதுவையில் அருந்ததியருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு-அ.தி.மு.க. வலியுறுத்தல்

    • அ.தி.மு.க.வை அழித்து ஒழித்து இரட்டை இலையை முடக்கம் செய்ய அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகள் துணையோடு தி.மு.க. தலைவர் எடுத்த நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டது.
    • 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை அழித்து ஒழித்து இரட்டை இலையை முடக்கம் செய்ய அ.தி.மு.க.வில் இருந்த சில துரோகிகள் துணையோடு தி.மு.க. தலைவர் எடுத்த நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டது.

    இதனால் தமிழக சட்ட மன்றத்தில் அ.தி.மு.க.விற்கு அவமதிப்பை தேடித் தரும் விதத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஒருசிலரை பயன்படுத்தி தமிழக முதல்-அமைச்சரும், தமிழக சபாநாயகரும் ஆடும் நாடகம் எடப்பாடியாரிடம் செல்லாது. தமிழகத்தை போல புதுவையிலும் அருந்ததியர் என பெயரை மாற்றி 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை.

    இதற்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் காரணம்.

    எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இதன் உண்மை தன்மையை அறிந்து அருந்ததியர் என பெயர் மாற்றி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×