என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு ஒய்ஸ்மேன் பள்ளி தாளாளர் சரோஜாபாபு, மன்னர் மன்னன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி ஆகியோர் பரிசுகள் வழங்கிய காட்சி.
கலை இலக்கிய போட்டி
- மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகளை முதலியார்பேட்டை ஒய்ஸ்மேன் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்தின.
- இயக்குனர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
பாரதிதாசன் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் நினைவு நாளையொட்டி மன்னர் மன்னன் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கலை, இலக்கிய போட்டிகளை முதலியார்பேட்டை ஒய்ஸ்மேன் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்தின.
இதற்கான பரிசளிப்பு விழா ஒய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சரோஜா பாபு தலைமை தாங்கி பேசினார். இயக்குனர் மதிவாணன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவரும், மன்னர் மன்னன் மகனுமான கோ.பாரதி கலை, இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இதில் பங்கேற்ற 168 மாணவர்களுக்கும் செயலாளர் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் செல்வதுரை நீஸ் சான்றிதழ்களை வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.






