என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ரகளை செய்த வாலிபர் கைது
- வில்லியனூர் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அருகே மங்கலம் பகுதியில் தனியார் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை முன்பு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி கொண்டு இருப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருவையாறு தேனீ.ஜெயக்குமார் நகரை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






