என் மலர்
புதுச்சேரி

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
தலைமை விருந்தினராக புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி அளவிலான நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணை ப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோரிஜூ ரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி கவுண்டன் பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வழியாக சென்றது. பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்






