என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மசாஜ்சென்டரில் வேலை பார்த்த வடமாநில முதியவர் சாவு
- கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று குணமானதும் அழைத்து வந்தனர்.
- அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதியார் சாவடியில் உள்ள பிரபல தனியார் கெஸ்ட் ஹவுஸில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சஞ்சய் பகவான் (வயது54), என்பவர் மசாஜ் செய்பவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மசாஜ் செய்வது வழக்கம். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று குணமானதும் அழைத்து வந்தனர். பின்னர் தொடர்ந்து அவர் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சஞ்சய் பகவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






