என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
காவலர்கள் பங்கேற்க அரசாணையில் திருத்தம் - மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை
- மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் காவலர்களுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. அதனை பின்பற்றி புதுவை காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் காவலர்கள் போட்டியிட நியமன அறிவிக்கை மற்றும் அரசாணையில் திருத்தம் செய்து, தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு ஜெகன்நாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






