search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டுப தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.
    • இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25-ம் ஆண்டை நோக்கி வெள்ளிவிழா கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரானா கட்டுபாடுகள் காரணமாக கொண்டாடப்படாத நிலையில் தற்போது 2022-ம் ஆண்டிற்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் கல்விக்குழுமத்தின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களிடம் இதுபோன்ற சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து வாழ்க்கையில் எவ்வாறு நலமுடன் முன்னேறுவது குறித்தும் நகைச்சுவை உணர்வோடு அவரது இயல்பான பாணியில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வண்ணம் பேசினார்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரேம் சுந்தர் அனைத்து துறை ஒருங்கிணைப்பாளர்க–ளுடன் இணைந்து செய்திருந்தார்.

    Next Story
    ×