search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.
    • கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடக்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் சந்தி ரசேகரன், பொருளாளர் கந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஞானவேல், பாலன், ராஜகுமாரி, முத்துவேல், கோடீஸ்வரன், ராமு, அன்பழகன், பாலகிரு ஷ்ணன், நடராஜன், பிரபு முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார்.

    பொதுச்செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் அந்தோணி வாழ்த்தி பேசினர். தினேஷ் பொன்னையா போராட்ட த்தை முடித்து வைத்தார். தொழிலாளர் துறை ஆணையர் பதவியை நிரப்ப வேண்டும்.

    நல வாரியத்தில் நிரந்தர பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தொழிலாளர் நலத்திட்ட ங்களை காலத்தோடு வழங்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்தவர்களை நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×