என் மலர்

    புதுச்சேரி

    அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    யாகசாலை பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்ற காட்சி.

    அகோர வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது.
    • ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்

    புதுச்சேரி:

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் காளிகாம்பாள் சமேத அகோரவீரபத்திர சாமி கோவில் உள்ளது.

    இங்குள்ள பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கை அம்மன், காளிகாம்பாள் சமேத அகோர வீரபத்திரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிய பராமச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய பராமச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நடந்த 2-ம் கால யாக பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    நாளை காலை 6.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம்புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி உமாபதி, திருப்பணிக்குழு தலைவர் ராமதாஸ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார், திருப்பணிக்குழு, கிராமவாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×