search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் ஓய்வறையில் அமர்ந்திருந்த காட்சி.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கோர்ட்டில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும். வக்கீல்களுக்கு, வழக்காளிகளுக்கும் எதிராக செயல்படும் முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருந்தது. அதன்படி வக்கீல்கள் இன்று கோர்ட்டை புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் செயலா ளர் சக்திவேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், இணை செயலாளர்கள் திருமலைவாசன், சம்பத், பாலசுந்தரம், சதீஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், சந்தோஷ், சூர்யா, கவியரசன் மற்றும் மூத்த வக்கீல்கள் பக்தவச்சலம், சுப்பிர மணியன், பாலசுந்தரம், பாலமுருகன், கண்ணன், ராஜேந்திரன், திருகண்ண செல்வன், சுப்பிரமணி, முகுந்தன், ராஜ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்க ணிப்பு போரா ட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×