என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில்  அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

    புதுவையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • கள்ளச்சாராயத்தை தடுக்ககோரி நடந்தது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி இந்திய வரலாற்றில் இருண்ட ஆட்சி யாகும். கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் 23 பேர் மரண மடைந்து நூற்றுக்கணக்கா னோர் சிகிச்சை பெற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 500 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதை திசை திருப்ப கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். தமிழக டாஸ்மாக்கில் போலி மதுபானம் விற்கப்படுகிறது. தமிழக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை செய்ய வந்த அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

    தாக்குதலுக்கு காரண மான அமைச்சர் உள்ளிட்ட வர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எனவே மத்திய அரசு தி.மு.க அரசை 6 மாதத்திற்கு முடக்கம் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுக்கு புதுவை முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என நாராயண சாமி கூறுகிறார்.

    தமிழக முதல்- அமைச் சரை பதவி விலகும்படி சொல்ல நாராயணசாமிக்கு தைரியம் உள்ளதா? தமிழக ஆட்சியில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் வாய்மூடி மவுனமாக உள்ளன.

    தி.மு.க கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் கிளை கட்சிகளாக மாறியுள்ளது. தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக திகழ, சிறந்த மாநிலமாக எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க அரசு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ ராஜா ராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, பி.எல். கணேசன், வி.கே.மூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், உழவர்கரை செயலாளர் சித்தானந்தம், மாநில

    எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில மன்ற செய லாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன். மாநில

    எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருத மலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன். மீனவரணி செய லாளர் ஞானவேல் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி வட்டார நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×