என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அங்கன்வாடிகளில் ஆதார் இணைப்பு முகாம் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
- முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.
- வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயகௌகுமார் ஆகியோருக்கு நேரு எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆனால் வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.
இதனால் உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர், விதவைகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பாதிக்கப்பட்ட முதியோர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையிலும், எம்.எல்.ஏ.,க்களிடமும் புகார் செய்கிறார்கள். இதற்கு தீர்வு காண மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் தொகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து விடுப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் இணைக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ., மனுவில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்