என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புரோட்டா தின்ற பெண் மயங்கி விழுந்து சாவு
- பட்டனூர்- இடையன்சாவடி செல்லும் சாலையில் விஜயா இருந்ததை பார்த்த ராஜு அருகே சென்று பார்த்த பொழுது விஜயா முழு போதையில் நிதானம் இன்றி இருந்தார்.
- விஜயா இந்த பகுதிக்கு ஏன் வந்தார்? மது அருந்தியது எப்படி?
புதுச்சேரி:
புதுவை பாக்கமுடையான்பட்டு வினோபா நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜுவின் 2-வது மனைவி விஜயா .
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயா வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் சென்று ராஜு தேடினார். ஆனால் எங்கும் விஜயா இல்லை.
இந்நிலையில் திண்டிவனம் பைபாஸ் சாலையில் தமிழக பகுதியான பட்டனூர்- இடையன்சாவடி செல்லும் சாலையில் விஜயா இருந்ததை பார்த்த ராஜு அருகே சென்று பார்த்த பொழுது விஜயா முழு போதையில் நிதானம் இன்றி இருந்தார்.
விஜயா கேட்டதன் பேரில் ராஜு கடைக்கு சென்று புரோட்டா வாங்கி வந்து போதையில் இருந்த விஜயாவுக்கு ஊட்டினார். புரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த விஜயா சிறிது நேரத்தில் மயங்கி இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ராஜுவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இறந்து கிடந்த விஜயா உடலை பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயா இந்த பகுதிக்கு ஏன் வந்தார்? மது அருந்தியது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






