என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மது குடித்துவிட்டு ரகளை செய்த வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    மது குடித்துவிட்டு ரகளை செய்த வாலிபர் கைது

    • அவ்வழியே செல்பவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர்-பரிக்கல்பட்டு ரோட்டில் ஒரு தனியார் மதுப்பானக்கடை எதிரே ஒரு வாலிபர் மது குடித்துவிட்டு அவ்வழியே செல்பவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சிதம்பரம் வல்லம் படுகை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் 29 என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×