என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
- குருசுகுப்பத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
குருசுகுப்பத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை குருசுகுப்பம் மேட்டுதெரு பகுதியில் ஒரு வாலிபர் குடிபோதையில் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்தும் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிர காசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் லாஸ்பேட்டை ஜிஞ்ஜர் ஓட்டல் பின்புறமுள்ள அர்ச்சுணன் தெருவை சேர்ந்த அருண்(வயது27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர்.
Next Story






